தமிழக செய்திகள்

பாதை சம்பந்தமாக தகராறு

தியாகதுருகம் அருகே பாதை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 62). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது தம்பி முனுசாமி என்பவருக்கும் விவசாய நிலத்தில் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து இருவரும் தனித்தனியாக தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் முனுசாமி, இவரது மனைவி சரசு, ராஜேந்திரன், இவரது மனைவி பழனியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்