கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கணவருடன் தகராறு: பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்த முனுசாமி மகள் சுகன்யா (34 வயது) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள்.

இதற்கிடையே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. சுகன்யா கணவரை பிரிந்து தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தாய் வீடான நெருப்பூருக்கு வந்தார். தன்னுடைய மகளையும் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர்த்து விட்டார்.

இதற்கிடையே முத்துவுக்கும், சுகன்யாவுக்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.