தமிழக செய்திகள்

ரெயில்களில் தீபாவளி பண்டிகை முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பாக ரெயில்களில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. அதன்படி, அக்டோபர் மாதம் 29-ந் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று ரெயில் டிக்கெட் முன்பதிவு நடந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் டிக்கெட்டுகள் 15 நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்தன.

இதேபோல, கன்னியாகுமரி, நிஜாமுதீன், அனந்தபுரி, திருச்செந்தூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும், அக்டோபர் 29-ந் தேதி பயணம் செய்பவர்கள் இன்றும், அக்டோபர் 30-ந் தேதி பயணம் செய்பவர்கள் நாளையும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்