தமிழக செய்திகள்

தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினத்தந்தி

சென்னை,

தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா எம்.பி., த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் பங்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு நிகழ்ச்சியில் இருந்ததால் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமியர்களை கவுரவப்படுத்துவது அ.தி.மு.க.வும், தே.மு.தி.மு.க. வும் தான். சட்டசபையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்ததை பார்த்து கண் திருஷ்டி பட்டுவிட்டதோ, என்னவோ?. நம்முடைய கட்சியிலும் ஸ்லீப்பர் செல்கள் இருந்திருக்கிறார்கள் என்றார்.

விஜயகாந்த் பேசும்போது, அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்