தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது சட்டசபை கூடும் நிலையில் ஆலோசனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. சட்டசபை கூடும் நிலையில் ஆலோசிக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரும், புதிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிய அரசின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமை (21-ந் தேதி) மாலை 5 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தியபிறகு, அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. எனவே, இந்தக் கூட்டத் தொடரில், தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், யார் யார் உரையாற்ற வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்