தமிழக செய்திகள்

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்றார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றுள்ளார்.

சென்னை,

திமுக பைல்​ஸ்

பாஜக முன்​னாள் மாநில தலை​வ​ரான அண்​ணா​மலை ‘ திமுக பைல்​ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்​சர்​கள் பலரது சொத்​துப்​பட்​டியல் குறித்த விவரங்​களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யிட்டார். அதில் குறிப்​பாக திமுக எம்​.பி.​ டி.ஆர்​.​பாலு மற்​றும் அவரது மகன் டி.ஆர்​.பி.​ராஜா மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினருக்​கு சொந்​த​மாக 21 நிறு​வனங்​கள் உள்​ள​தாக​வும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்​துகள் உள்​ள​தாக​வும் குறிப்​பிட்டிருந்​தார்.

அவதூறு வழக்கு

இது தனது பெயருக்கும், குடும்பத்தினர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்தார். இந்த வழக்கு சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17- வது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு வாபஸ்

கடந்த 26-ம் தேதி நடந்த விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலையே குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து வழக்கு 30-ம் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை டி.ஆர். பாலு திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.