தமிழக செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1-ம் தேதி மத்திய அரசின் 2024 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 10-ம் தேதி சனிக்கிழமையான இன்று வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த சில நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மசோதாக்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வெள்ளை அறிக்கை மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு