தமிழக செய்திகள்

பிடிஆர்-க்காக திமுக வழக்கு தொடுக்காது - டிகேஎஸ் இளங்கோவன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்காக திமுக வழக்கு தொடுக்காது என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சொத்து குறித்து ஆங்கிலத்தில் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், இந்த ஆடியோ பதிவு உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் சந்தித்து பேசினார். ஆடியோ விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தநிலையில், முதல்-அமைச்சருடனான இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆடியோ விவகாரம் குறித்து திமுக செய்தித் தொடர்புத்தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது:-

"ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக தொடுக்காது. ஆடியோ போலியானது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் புகார் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்." என்று கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை