தமிழக செய்திகள்

சேத்துப்பட்டு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டாக்டர் பலி

சேத்துப்பட்டு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் அபுதாபி (வயது 38). சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 24-ந்தேதி தனது சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்துகொண்டிருந்தார். ரெயில் சேத்துப்பட்டு அருகே வந்துகொண்டிருந்தபோது படிகட்டு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் அபுதாபி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா