தமிழக செய்திகள்

போக்சோவில் டிரைவர் கைது

ஆனைமலை அருகே போக்சோவில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது உறவினரான டிரைவர் ஒருவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொண்டால் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்று ஆசை வார்த்தை கூறி கடந்த 15-ந் தேதி சிறுமியை டிரைவர் கடத்தி சென்றார். பின்னர் திருமணம் செய்து கொண்டார். மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பிணியானார்.

இதுகுறித்து வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து