தமிழக செய்திகள்

லாரிகள் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்து: டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

நல்லம்பள்ளி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. டேங்கர் லாரியை திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சாலையோரம் நின்று கொண்டிருந்த ட்ரெய்லர் பார லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் மணிகண்டன் பலத்த காயமடைந்து விபத்தில் சிக்கி தவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கசாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து டிரைவர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து