தமிழக செய்திகள்

தக்கலை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது

தக்கலை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜய், டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் அருண் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இடைய வாக்குவாதம் ஏற்பட்டு மோதி கொண்டனர். இதில் இருவரும் மாறிமாறி கத்தியால் குத்திகொண்டனர். படுகாயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அஜய், அருண் உள்பட 4 பேர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அருணை போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து