தமிழக செய்திகள்

முருங்கைக்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

வடகாடு பகுதிகளில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் முருங்கை மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். நன்கு விளைந்து நிற்கும் முருங்கைக்காய்களை பறித்து கமிஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்வது வழக்கம். தற்போது 100 முருங்கைக்காய்கள் கொண்ட கட்டு ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த இருமாதங்களுக்கு முன்பு முருங்கைக்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் முருங்கைக்காய் ஒன்று 30 காசுக்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் முருங்கைக்காய்கள் வீணாகி குப்பைகளில் கொட்டப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு