தமிழக செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்: கொலம்பியா நாட்டுக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, கொலம்பியா நாட்டுக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

சென்னை,

கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் எட்வின் என்ரிக்யூ (வயது 32). துபாயில் இருந்து சென்னைக்கு மார்க்கர் பேனாவில் போதை பொருள் கடத்தி வந்த இவரை, கடந்த 2015-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.தேன்மொழி, குற்றம்சாட்டப்பட்ட எட்வினுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை