தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்: ரூ.27,500 அபராதம் விதித்த போலீசார்

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மினி பஸ் ஓட்டுநரான கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் (வயது 48) என்பவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் ஜெபர்சனுக்கு ரூ.17,000-ம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ.10,500-ம் என மொத்தம் ரூ.27,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்