தமிழக செய்திகள்

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடந்தது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் தீமிதி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான வில்வலைப்பு, அர்ஜுனன் தபசு, அரவான் கடபலி, கட்டைக் கூத்து, மகாபாரத நாடகம் ஆகியவை நடந்தது.

கடைசிநாளில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சுவாமிக்கு அக்னி குண்டத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் காப்புக் கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்