தமிழக செய்திகள்

வால்பாறையில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்

வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று இ-பாஸ் பெற்றே வந்தனர்.

தினத்தந்தி

கோவை,

வால்பாறையில் குற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இ-பாஸ் நடைமுறையை கடைபிடிக்க கோர்ட்டு உத்தாவிட்டது. இதையடுத்து இன்று முதல் வால்பாறையில் இ-பாய் நடைமுறைக்கு வந்தது. https://www.tnepass.tn.gov.in/home இணையதளம் வாயிலாக இ-பாஸ் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதையடுத்து, வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று இ-பாஸ் பெற்றே வந்தனர்.

ஆழியார் வனத்துறை சோதனை சாவடி, சோலையார் அணை இடதுகரை சோதனை சாவடி என 2 இடங்களில் வருவாய்த் துறை, உள்ளாட்சித்துறை, வனத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இ-பாஸ் பெறாத வாகனங்களுக்கு சோதனை சாவடிகளிலேயே இ-பாஸ் பதிவு செய்து கொடுப்பதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்மூலம் அவர்களுக்கு இ-பாஸ் பதிவு செய்து கொடுத்து வால்பாறைக்கு அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்