தமிழக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தினத்தந்தி

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதையொட்டி நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் பங்கு தந்தை செல்வம் தலைமையில் கூட்டுத் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சிறப்பு பிரார்த்தனை

மேலும் தமிழ் பாப்தீஸ்து திருச்சபையில் போதகர் மனோவா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது டேனியல் தேவராஜ் தேவ செய்தியை பேசினார். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப்காட் திருச்சபை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்