தமிழக செய்திகள்

நிவர் புயல் எதிரொலி: தென்மாவட்ட ரெயில்கள் இன்று ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நிவர் புயல் எதிரொலியால் தூத்துக்குடி, நெல்லை உள்பட 24 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும் 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நிவர் புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட 24 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை எழும்பூர்-மதுரை-எழும்பூர் (வண்டி எண்: 02613/02614), மதுரை- எழும்பூர்-மதுரை (02636/ 02635), எழும்பூர்- காரைக்குடி- எழும்பூர் (02605/02606), எழும்பூர்-செங்கோட்டை- எழும்பூர் (02661/02662) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், நெல்லை- எழும்பூர்-நெல்லை (02632/ 02631), தூத்துக்குடி-எழும்பூர்- தூத்துக்குடி (02694/ 02693), எழும்பூர்-கன்னியாகுமரி-எழும்பூர் (02633/02634), எழும்பூர்-கொல்லம்-எழும்பூர் (06723/06724), ராமேசுவரம்-எழும்பூர்-ராமேசுவரம் (02206/02205), எழும்பூர்-கொல்லம்-எழும்பூர்(06101/06102) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரை-எழும்பூர்-மதுரை (02653/02654), எழும்பூர்-திருச்சி-எழும்பூர் (02653/02654) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை