தமிழக செய்திகள்

பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், உங்கள் பிறந்த நாளான இந்த மகிழ்ச்சியான தினத்தில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தேசத்துக்கும், மக்களுக்கும் நீங்கள் சேவையாற்றுவதற்கு நல்ல உடல்நலத்துடன் கூடிய மேலும் பல ஆண்டுகளை அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்