தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுப்பது இல்லை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முற்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்க முயன்றதாக சிவி சண்முகம் தரப்பு குற்றம் சாட்டிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அக்னி கிருஷ்ணமூர்த்தி இதனை மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அக்னி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டவர் ஈ.பி.எஸ். அவர் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுப்பது இல்லை. மாவட்ட செயலாளர் அளிக்கும் பரிந்துரைப்படியே வேட்பாளர்களுக்கு சீட் தந்தார்திருமாவளவனை முதல்வராக்க ஈ.பி.எஸ் ஒப்புக்கொண்டார். பிறகு திமுகவுடன் கூட்டணி என்று சிவிஎஸ் கூறிய பிறகே நிராகரித்தார் ஈ.பி.எஸ். திமுகவுடன் சேர்ந்து ஈ.பி.எஸ் ஆட்சி அமைக்க முற்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. கட்சிக்கு அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்