தமிழக செய்திகள்

கழுகுமலையில் கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது: பணம், பைக் பறிமுதல்

கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார், சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார் நேற்று சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே பைக்கில் சென்றவரிடம் சோதனை நடத்தினர்.

அதில் அந்த நபரிடம் கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் இருப்பதும், அந்த நபர் ஆரியங்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கழுகுமலை அரண்மனை வாசல் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சோமு (வயது 73) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 46 லாட்டரி சீட்டுகள், ரூ.5,400, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து