தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 1வது தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் சதீஷ் (வயது 19). இந்த வாலிபர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தெல்லை கெடுத்துள்ளார். இதனைப் பார்த்து கண்டித்த சிறுமியின் தாத்தாவை அந்த வாலிபர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதில் காயம் அடைந்த முதியவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர்.