தமிழக செய்திகள்

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த செட்டிச்சார்விளை கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்தவர் தேவசிகாமணி (வயது 71). இவருடைய மனைவி மரிய புஷ்பம். இவர்களுடைய மகன் பைஜூ. மரிய புஷ்பத்துக்கு கால்முட்டியில் தேய்மானம் ஏற்பட்டு நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேவசிகாமணி வருத்தத்தில் அதிகமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டின் பின்புறம் தவசிகாமணி விஷம் குடித்து ரத்தவாந்தி எடுத்தார். உடனே அவரை பைஜூ மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவசிகாமணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பைஜூ அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்