தமிழக செய்திகள்

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.

தினத்தந்தி

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 39). இவருடைய தாயார் ராதா (79). சம்பவத்தன்று ராதா அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ஸ்ரீஜாவும், அவரது உறவினர்களும் குளத்துக்கு சென்றனர். அங்கு ராதா குளத்தில் மிதந்த நிலையில் காணப்பட்டார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குளத்தில் தவறி விழுந்து ஆழமான பகுதிக்கு சென்றதால் ராதா இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்