தமிழக செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகளால் கணிசமான அளவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை,

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகளால் கணிசமான அளவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். அதன் விவரங்கள் பின்வருமாறு:

*ரொக்கம்: ரூ.2.37 கோடி

*மதுபானம்: ரூ.0.18 கோடி

*போதைப்பொருட்கள்: ரூ.2.88 கோடி

*விலைமதிப்பற்ற உலோகங்கள்: ரூ.16.42 கோடி

*இலவசங்கள் / பிற பொருட்கள்: ரூ. 20.80 கோடி

தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.என தெரிவிக்கப்பட்டுள்ளது.