தமிழக செய்திகள்

தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு 'புதிர்' - வைகோ பேட்டி

இந்தத் தேர்தல் முடிவுகளில் ஆச்சரியங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் என வைகோ கூறினார்.

சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு விதமான முடிவுகளை வெளியிட்டுள்ளன.

நான்கு அமைப்புகள் நடத்திய கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில், வேறு இரண்டு அமைப்புகள் அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் எனக் கூறியுள்ளன.

குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட கருத்துக் கணிப்பு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து அனைவரும் ஆவலாக உள்ளனர்.

இந்தத் தேர்தல் முடிவுகளில் ஆச்சரியங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆகையால், இந்தப் புதிரைக் காத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.