தமிழக செய்திகள்

மின் விபத்து தடுப்பு செயலி.. மின்சார வாரியம் அறிமுகம்

தமிழ்நாடு மின்சார வாரியம், ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம், ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின் விபத்துகளால் ஊழியர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, மின் விபத்து தடுப்பு பணிக்கு, தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின் வாரியம் முடிவு செய்தது.

இதன்படி, "டான்ஜெட்கோ சேப்டி - உன் பாதுகாப்பு உன் கையில்" என்ற மொபைல் போன் செயலி, வரும் 1-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இதன்படி, பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என அண்மையில் மின்சார வாரியம் தெரிவித்த நிலையில், புதிய செயலி வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து