தமிழக செய்திகள்

மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை முன்னிட்டு, மின்சார ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மின்சார ரெயில் சேவையில் கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு ஆவடி நோக்கியும், பிற்பகல் 1.05 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், பிற்பகல் 1.50 மணிக்கு பட்டாபிராம் நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல ஆவடியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து பகல் 12.35 மணிக்கு ஆவடி நோக்கியும், திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், திருவள்ளூரில் இருந்து காலை 11.05 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்களும் இன்று ரத்து செய்யப்படுகின்றன.

திருவள்ளூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் பயணிகள் ரெயிலாக அங்கிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பட்டாபிராம் நோக்கி புறப்படும்.

கடம்பத்தூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும், ஆவடி- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும் வியாசர்பாடி ஜீவா- சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, மூர்மார்க்கெட்டுக்கு மாற்று வழிப்பாதையில் செல்லும்.

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு திருத்தணி நோக்கியும், பிற்பகல் 2.30 மணிக்கு அரக்கோணம் நோக்கியும், பிற்பகல் 2.45 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கியும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு