தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி

திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

தினத்தந்தி

சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிபூண்டிக்கு நேற்று பகல் 2 மணிக்கு மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருவொற்றியூரில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன.

இதுபற்றி ரெயில்வே துறை தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணியளவில் சிக்னல் சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய மின்சார ரெயில்களும், அடுத்தடுத்து வந்த பினாகினி, சங்கமித்ரா போன்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சுமார் 1 மணிநேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?