தமிழக செய்திகள்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

மின்சாரம் பாய்ந்தது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஷீலாதேவி. இவர்கள் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தலையீத்துப்பட்டி என்ற ஊரில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கண்ணன் அதே ஊரை சேர்ந்த குணசேகரன் என்பவர் வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கண்ணன் தூக்கி வீசப்பட்டார்.

சாவு

இதையடுத்து அவரை சக தொழிலாளர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஷீலாதேவி கொடுத்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்