தமிழக செய்திகள்

வாடிப்பட்டி அருகே வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி

வாடிப்பட்டி அருகே வேன் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்

தினத்தந்தி

வாடிப்பட்டி,

சோழவந்தான் அருகே நெடுங்குளம் களத்து வீடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டார் மகன் நாகராஜன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் நேற்று அய்யங்கோட்டையில் இருந்து நகரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நகரி சுடுகாடு முன்பாக சென்றபோது அய்யங்கோட்டை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜன் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்