தமிழக செய்திகள்

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர்

ஓசூர் கோட்டம் உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்க்கம், பீர்ஜேப்பள்ளி, நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிப்பள்ளி, வரகானப்பள்ளி, கடூர், சின்னட்டி, கெலமங்கலம், காடுதானப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, இருதாளம், அனுசோனை, பொம்மதாதனூர், ஜே.காருப்பள்ளி, முகலூர், ஜக்கேரி, அக்கொண்டப்பள்ளி, பைரமங்கலம், பச்சப்பனட்டி, பஞ்சாட்சிபுரம், பேவநத்தம் அலசட்டி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துகோட்டை, பாரந்தூர், அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, தண்டரை, கண்டகானப்பள்ளி, பால தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதானப்பள்ளி, திம்மசந்திரம், அரசகுப்பம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் ராயக்கோட்டை நகரம், ஒண்ணம்பட்டி, காடு மஞ்சூர், புதுப்பட்டி, ஈச்சம்பட்டி, லிங்கம்பட்டி, கொப்பகரை, முத்தம்பட்டி, தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, தின்னூர், வேப்பலம்பட்டி, லட்சுமிபுரம், எஸ்.என்.அள்ளி, கருக்கனஅள்ளி, எடுவனஅள்ளி, அளேசீபம், எச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT