தமிழக செய்திகள்

அடையாறு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை,

அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் (இன்று) 05.03.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற் பொறியாளர்/இ&ப/அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-II) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.