தமிழக செய்திகள்

சென்னையில் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது - மின்வாரியம்

மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பு கருதி மின்வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது

தினத்தந்தி

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று இரவு முதல் விடாமல் பெய்யும் கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் சென்னை மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனிடையே சென்னையில் இன்று காலை முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் அதிக அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. மழை வெள்ளத்துக்கு இடையே மின்சாரமும் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், சென்னையில் நிறுத்தப்பட்ட மின் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. மழை குறைந்த பகுதிகளில் மீண்டும் மின் வினியோகம் தொடங்கியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்