தமிழக செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் குளித்த யானைகள் கூட்டம்

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் குளித்த யானைகள் கூட்டம்

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் குடிப்பதும், ஆனந்த குளியல் போடுவதும் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் குள்ளட்டி வனப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் காட்டு யானைகள் கூட்டம் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்டன. நீண்ட நேரம் வெயிலுக்கு இதமாக குளியல் போட்ட காட்டு யானைகள் பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை போக்க வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் தேவைகள் தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து