தமிழக செய்திகள்

தமிழகத்தில் தொடரும் என்கவுண்டர் - மனித உரிமை ஆணையம் அதிரடி

கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடியபோது, காவல்துறையினர் சுட்டுப்பிடித்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் உத்தவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் விசாரணையின்போது தப்பிச்செல்லும் ரவுடிகளை கடந்த ஒரு மாதமாக போலீசார் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள். துப்பாக்கிச்சூட்டின்போது மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் காலில் குறி வைத்து சுட்டு அவர்களை பிடிக்கிறார்கள்.

இந்த நிலையில், கோவை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடியபோது, காவல்துறையினர் சுட்டுப்பிடித்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு