தமிழக செய்திகள்

கோவளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை

கோவளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

புத்தாண்டையொட்டி கடந்த 31-ந்தேதி இரவு கேளம்பாக்கம் போலீசார் கோவளம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவளம் கடற்கரையோரத்தில் ஆண் பிணம் ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்ததில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் கடற்கரையோரம் ஒதுங்கி கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் கோவையை சேர்ந்த ஜெகதீசன் (வயது 38) என்பதும் சிறுசேரியில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஜெகதீசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்