தமிழக செய்திகள்

பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 6-ந்தேதி முதல் கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது. பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 விண்ணப்பங்கள் குவிந்தன.

அதில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். அவர்களில், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேரடி 2-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பாலிடெக்னிக் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnlea.com என்ற இணையதளத்தின் வாயிலாக நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி