தமிழக செய்திகள்

அந்தமானில் ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு அந்தமானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போர்ட் பிளேர்,

ஜி20 கூட்டமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தேனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகே, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கெரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரேப்பியா ஒன்றியம் ஆகியவை 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஆண்டுதேறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு தலைமை பெறுப்பு என்பது ஒவ்வெரு நாடுகளுக்கும் சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும். இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தேனேசியா தலைமையேற்று நடத்தியது.

இதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 1-ந்தேதி ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு ஜி20 சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்தமான் தீவில் இது தொடர்பான கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. ஜி20 நாடுகளின் தூதர்கள் அந்தமானுக்கு வருகை தந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய வழக்கப்படி சங்கு ஊதி தூதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்