தமிழக செய்திகள்

திருப்பத்தூரில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆங்காங்கே பள்ளங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அடுப்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவற்றை மொத்தமாக போலீசார் அழித்தனர். மேலும், அதனை பதுக்கி வைத்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்