தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி

தமிழ்நாடு பெயர் சூட்டிய நாளையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறுகிறது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறினார்.

தினத்தந்தி

தமிழ்நாடு பெயர் சூட்டிய நாளையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறுகிறது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டுரை, பேச்சுப்போட்டி

தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்த போது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார். அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.இவ்விழாவினை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.மாவட்ட அளவில் கட்டுரை. பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம்-, 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

போட்டி நடைபெறும் நாள்

போட்டிகள் நடைபெறும் இடம். நாள், நேரம். போட்டிக்கானத் தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும். இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து