தமிழக செய்திகள்

"கோட்டையில் நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், மக்களிடம் சேர்க்க வேண்டியது நீங்கள் தான்" - முதல் அமைச்சர்

பேரூராட்சித்தலைவர்கள், துனைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கலைவானர் அரங்கில் பேரூராட்சித்தலைவர்கள், துனைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;

"நிர்வாக பணிகளில் ஈடுபட இருக்கும் உங்களிடம் சீரான, சிறப்பான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களுக்காக பணியை சிறப்பாக செயலாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த பயிற்சிமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

கோட்டையில் அமர்ந்துகொண்டு நாங்கள் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், அதனை சரியான முறையில் மக்களிடம் கொண்டுபாய் சேர்க்க வேண்டியது நீங்கள்தான். அந்த பொறுப்பும், கடமையும் உங்களிடம் உள்ளதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. உங்களை நம்பியே திட்டங்களை ஒப்படைக்கிறோம்.

மக்களுக்கு தொண்டாற்றவே தேர்தல் நடத்தப்படுகிறது. எவ்வித முறைகேடும், புகாரும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். அரசியல் சட்டத்திருத்தப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்". இவ்வாறு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்உரையாற்றினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை