தமிழக செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 84.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 84.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தினத்தந்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 84.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ்1 தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பிளஸ்- 1 வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவுபெற்று, நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 74 மாணவர்களும், 5 ஆயிரத்து 955 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 29 பேர் தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 3 ஆயிரத்து 850 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 437 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 75.88 சதவீதம் மாணவர்களும், 91.3 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் மூலம் பிளஸ்-1 தேர்வில் மயிலாடுதுறை மாவட்டம் 84.21 சதவீதம் தேர்ச்சியை பெற்று உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு