தமிழக செய்திகள்

நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

‘நீட்‘ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தினத்தந்தி

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். கிராம நிர்வாக அலுவலர் காலி பணியிடங்கள் தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. அமைப்பிடம் பட்டியல் வழங்கி உள்ளோம்.

தற்போது கொரோனா காலம் என்பதால், தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. மிக விரைவில் தேர்வுகள் நடைபெற்று அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்படும்.

தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். வாழ்க்கையே நீட் தேர்வுதான் என்று மாணவர்கள் அச்சம் கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் நாம் நம்பிக்கையை கையில் எடுத்தால், வெற்றி நம் கண் முன்னே இருக்கும். இந்த உயிர் தாய்-தந்தையால் நமக்கு கொடுக்கப்பட்ட கொடை. இதை மாய்த்துக்கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது.

நீட் தேர்வுக்கு பயந்து மதுரை மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது போன்ற துயர சம்பவம் இனியும் தமிழகத்தில் நடைபெறக் கூடாது என இறைவனை வேண்டுகிறேன். தற்போது இந்தியா முழுவதும் ஒரு தகுதி தேர்வு தேவையா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

சாமானிய மக்கள், ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் வெளியே வரவேண்டியது உள்ளது. சமுதாயம், பொருளாதார ரீதியில் நாங்கள் அவர்களை முன்னெடுத்து செல்ல வேண்டியது இருக்கிறது. அவர்களுக்கு சமநீதியான வாய்ப்பு கொடுக்க வேண்டியது உள்ளது. எனவே இதுபோன்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்ள எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியுடன் உள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகளோடு, பருவமழைக்காலத்தையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு