கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளும், ஆள் மாறாட்டமும் நடைபெற்றுள்ளது. அரியானாவில் ஒரு மையத்தில் தேர்வு எழுதிய ஏழு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். சிலருக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்ணும் வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக மாறி வருகிறது. எனவே நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நேர்மையான, நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட்டிலிருந்து விலக்கு பெற, தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கத் தவறும் ஒன்றிய அரசின் மாநில விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை