தமிழக செய்திகள்

ஆடிப்பூரத்தையொட்டி மேல்மருவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்-திருச்சி (வண்டி எண்: 12653) செல்லும் ராக்போர்ட், எழும்பூர்-மதுரை(12635) செல்லும் வைகை, எழும்பூர்-மதுரை(12637) இடையே இயக்கப்படும் பாண்டியன், எழும்பூர்-செங்கோட்டை (12661) செல்லும் பொதிகை, எழும்பூர்-மன்னார்குடி(16179) இடையே இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-நாகர்கோவில்(16191) செல்லும் அந்தியோதயா ஆகியவை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.

* இதேபோல் மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர்(12654) இடையே இயக்கப்படும் ராக்போர்ட், மதுரை-எழும்பூர் (12636) இடையே இயக்கப்படும் வைகை, மதுரை-எழும்பூர்(12638) செல்லும் பாண்டியன், செங்கோட்டை-எழும்பூர்(12662) செல்லும் பொதிகை, மன்னார்குடி-எழும்பூர்(16180) இடையே இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-தாம்பரம் (16192) இடையே இயக்கப்படும் அந்தியோதயா ஆகிய ரெயில்களும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு