தமிழக செய்திகள்

மிலிட்டரி கேன்டீனை முற்றுகையிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள்...!

விருதுநகர் மிலிட்டரி கேன்டீனை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகரில் மிலிட்டரி கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கேன்டீனுக்கு பொருட்கள் சரிவர வினியோகம் செய்யவில்லை என்று தெரிகின்றது.

இதற்கு முன் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று மிலிட்டரி கேன்டீன் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் கூடினர்.

அப்போது மிலிட்டரி கேன்டீனுக்கு முறையாக பொருட்கள் வினியோகம் செய்ய வலியுறுத்தி கேன்டீனை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்