தமிழக செய்திகள்

மதுரவாயல்-வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணமே வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு - ஐகோர்ட்டு அதிரடி

மதுரவாயல்-வாலாஜாபேட்டை இடையிலான 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கும் உத்தரவை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், அந்த சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல்-வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆணையம் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், இந்த திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு 4 வழிச்சாலைத் திட்டமாக தொடங்கப்பட்டது. தற்போது இதனை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் கடந்த ஆண்டைவிட தற்போது இந்த சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15-ந் தேதிக்குள் பராமரிப்பு பணிகள் முடிந்துவிடும். அதேநேரம், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட மாநில அரசுத்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்த பராமரிப்பு பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைப்பது இல்லை என்று கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், மதுரவாயல்-வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை வரும் மார்ச் 11-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு