தமிழக செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவேற்காடு, வி.ஜி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மகன் திவாகர் (வயது 18). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் திவாகர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றுவிட்டதால் திவாகர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த திவாகர், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு